பக்கங்கள் செல்ல

Tuesday, April 28, 2015

எதிர் தொடர் 12: இஸ்லாம் எந்த வகையான ஒழுக்க நெறிகளை போதிக்கிறது

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

எதிர்தொடர் 12:இஸ்லாம் எந்த வகையான ஒழுக்கநெறியை போதிக்கிறது
      இந்த கட்டுரையில் ஒரு சேர பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாளர் அடுக்கியுள்ளார்.[refer:Source] அடிமை முறை குறித்து முன் சென்ற கட்டுரையில் தெளிவாக கண்டுவிட்டோம். அவரது அறியாமை இந்த தொடரிலும் பல்லிளிக்கிறது. இந்த தொடரில் அவரது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரப்பூர்வமான சான்றுகளைக் கொண்டு பதிலளித்துள்ளோம்.

குற்றச்சாட்டு 1:


நமது பதில்:
உமர்(ரலி) அவர்களை கண்டு விருண்டோடும் ஷைத்தான்கள்:
            இந்த தொடரில் உமர்(ரலி) அவர்களின் நச்சரிப்பால்தான் பர்தா வந்ததாக உளரியுள்ளார். அது தவறு என்பதை சென்ற தொடர்களில்( எதிர் தொடர் 10) விளக்கியுள்ளோம். அது போகட்டும் இந்த தொடரில் உமர்(ரலி) அவர்களின் ஒழுக்கத்தை எடை போட முற்பட்டுள்ளார். அவர் பதிவு செய்த ஆதாரம் இதோ, 

أخبرنا محمد بن عمر أخبرنا سيف بن سليمان عن قيس مولى بن علقمة عن داود بن أبي عاصم الثقفي عن سعيد بن المسيب قال خرج عمر بن الخطاب على أصحابه يوما فقال أفتوني في شيء صنعته اليوم فقالوا ما هو يا أمير المؤمنين قال مرت جارية لي فأعجبتني فوقعت عليها وأنا صائم قال فعظم عليه القوم وعلي ساكت فقال ما تقول يا بن أبي طالب فقال جئت حلالا ويوما مكان يوم فقال أنت خيرهم فتوى

இதன் அறிவிப்பாளர் தொடர்:
Qays bin Sa'd al-Mky-->Syf bin Sulaiman(death 150 ah)-->Muhammad ibn Umar al-Waqidi(birth 130 ah)-->Muhammad ibn Sa'd ibn Mani' al-Hashimi al-Baghdadi(ibn sa'd)

    இப்னு சஅத் அவர்கள் முஹம்மது இப்னு உமர் அல் வாகிதி என்பாரிடம் செவியேற்றதாக இந்த செய்தியை பதிவு செய்துள்ளார். ஆனால் இவர் பொய்யர் என்று பல அறிஞ்கர்களால் சாடப்பட்டவர். நவவீ , தாரகுத்னீ இவரை பலவீனமானவர் என்றும், ஷாஃபிஹ், அஹமது இப்னு ஹம்பல், புஹாரி,நஸயீ ஆகியோர் வாகிதியை பொய்யர் என்றும் ஹதீஸ்களில் இட்டுகட்டுபவர் என்றும் கூறுகின்றனர். ஆக இவர் கூறும் இந்த செய்தி பலவீனமானதாகும். ஏற்கத்தக்கது அல்ல. இந்த ஆசிரியர் சரியான செய்திகளில் இருந்து எந்த குற்றச்சாட்டையும் கூற முடியாத காரணத்தால்தான் இத்தகைய இட்டுகட்டபட்ட செய்திகளின் பக்கம் ஓடிகொண்டிருக்கிறார். தனது ஹதீஸ் குறித்த அறிமுகத்தில் இவர் கூறியது எதையுமே இவர் ஏற்று கொள்ள வில்லை. அல்லது செயல் படுத்தவில்லை என்பது தெளிவு..

குற்றச்சாட்டு 2: முஸ்லிம்கள் அடிமைகளுக்கு காயடித்தனரா?

நமது பதில்:
அடிமைகளை சேதப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
நபி(சல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:
      தனது அடிமையை கொலை செய்தவரை நாமும் கொலை செய்வோம் சேதப்படுத்தியவரை நாமும் சேதப்படுத்துவோம்.யார் காயடித்தாரோ அவருக்கு நாம் காயடிப்போம்.
அறிவிப்பாளர்: சமுரா பின் ஜுன்துப்(ரலி)
நூல்: நஸயீ(4740), இப்னு மாஜா(2663)

  இஸ்லாம அடிமைகளை இவ்வாறு சேதப்படுத்துவதையும் காயடிப்பதையும் இஸ்லாம் தடை செய்து உள்ளது எனபதை மேற்குறிப்பிட்ட அறிவிப்பு கூறுகிறது. அப்படி இருக்கும் போது இவர் கூறும் குற்றச்சாட்டுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இவர் முன் சென்ற கட்டுரையில் ஒரு குற்றச்சாட்டை பதிந்து உள்ளார். அதாவது அடிமைகளை உற்பத்தி செய்வதற்குதான் இஸ்லாம் அடிமை முறையை ஆதரித்ததாக கூறினார்.( தொடர் 11: வன் கலவியும் வேதவெளிப்பாடும்) அடிமைகளை உற்பத்தி செய்வது நோக்கமாக இருந்தால் ஏன் அடிமைகளுக்கு காயடிக்க வேண்டும் . ஏன் இவரது ஒவ்வோறு தொடரும் இவரது குற்றச்சாட்டை இவரே மறுப்பதாக அமைந்துள்ளது என்பதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

அடிமைகளுக்கு காயடித்த பாதிரிகள்:
                ஆனால் இவ்வாறு காயடிக்கப்படாவிட்டால் ஏன் அடிமைகள் பெருக வில்லை. என்பதற்கான விடையை நாம் வரலாற்றில் தேடுவோம். இது குறித்து ஆய்வு செய்த இஸ்ரேலிய அறிஞர் EHUD TOLEDANO பின்வருமாறு கூறுகிறார்

P.No.383 
        அதாவது 19ம் நூற்றாண்டு வரை காயடிக்கும் பழக்கத்திற்கான சான்றுகளை உஸ்மானிய பேரசுகளில் காணமுடியவில்லை என்று கூறுகிறார். பிறகு எப்படி காயடிக்கப்பட்ட அடிமைகள் உள்ளே கொண்டுவரப்பட்டனர். அதற்கான காரணத்தையும் அவர் விளக்குகிறார்.
THE IMPERIAL EUNUCHS OF ISTANBUL FROM AFRICA TO THE HEART OF ISLAM-P.No.383 

      அதாவது கிறித்தவ பகுதிகளில் கிறித்தவ பாதிரிகளால் காயடிக்கப்பட்டு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் UNESCO வின் International  Scientific Committee for Drafting of a Genaral History of Africa வெளியிட்டுள்ள ஆப்ரிக்க வரலாற்று நூல் 16ம் பக்கத்தின் அடிக்குறிப்பு பின்வருமாறு கூறுகிறது.


           அதாவது Reinhard Dozy என்ற பிரஞ்சு அறிஞர் ஐரோப்பாவின் வெர்டுன் நகரைஅரவாணி தொழிற்சாலைஎன்று கூறுவதாக அந்த நூல் சாடுகிறது. ஆக இஸ்லாமியர்கள் இப்படி ஒரு அநீதியை இழைக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவு.

       ஆனால் இதற்கு பின்னால் ஒரு சூழ்ச்சி ஒளிந்து உள்ளது. கிறித்தவ சாம்ராஜ்ஜியத்தில் அடிமைகளை இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் விற்பதற்கு தடை பலமுறை கிறித்தவ போப்புகளால் விதிக்கப்பட்டது ( 1317, 1323, 1329, 1338,  1425 ). இது தடை செய்யப்பட்டதற்கான காரணம் இவ்வாறு விற்கப்படும் அடிமைகள் இஸ்லாமியர்களின் போர்படைகளில் இணைக்கப்பட்டனர். அந்த அடிமைகள் பிற்காலத்தில் விடுதலை அடைந்த்தோடு அல்லாமல் அவர்கள் தங்களது முன்னால் எஜமானர்களை போர்களில் வீரியமாக எதிர்த்தனர் என்ற கவலைதானாம்.( Slavery, Slave Trade. ed. Strayer, Joseph R. Dictionary of the Middle Ages. Volume 11. New York: Scribner, 1982) உன்மையில் முஸ்லிம்கள் அடிமைகளை துன்புறுத்தியிருந்தால் ஏன் தங்களது முன்னால் எஜமானர்களை வீரியத்துடன் எதிர்க வேண்டும். சரி இதன் பின்னணியில் உள்ளதை நாம் தொடர்வோம். பலமுறை போப் அடிமை முறையை தடை செய்தும் ஏன் அரவாணி உற்பத்தி நிலையங்கள் வெனிஸ் நகரத்திலேயே செயல்பட்டது. (Mary A. Valante, Castrating Monks: Vikings, the Slave Trade, and the Value of Eunuchs, in 'Castration and Culture in the Middle Ages' ed. Larissa Tracy). கிறித்தவ போப் அடிமைகளை விற்பதை தடை செய்ய காரணம அவர்கள் முஸ்லிம்களால் போர்விரர்களாக ஆகப்பட்டதுதான் என்று முன்பே குறிப்பிட்டோம். இது தான் அந்த அடிமைகளுக்கு காயடிக்கவும் காரணம். அவர்களை ஆண்மை நீக்கம் செய்வதால் பேடிகளாக்கலாம், போர்படையின் எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம், என்ற கிறித்தவ உலகின் எண்ணத்தில் இஸ்லாமிய அரசுகள் மண்ணைவாரி இறைத்தது. ஆம் இவ்வாறு ஆன்மைநீக்கம் செய்யப்பட்ட ஆண்களை போர்வீரர்களாக்க இஸ்லாமிய அரசுகளால் PALACE SCHOOLல் அரச பிள்ளைகளுடன் பயிற்றுவிக்கப்பட்டு ஈட்டி வீர்ர்களாகவும் , மெய்காப்பாளராகவும் மாற்றப்பட்ட்தாக வரலாற்று அவனங்கள் பதிவு செய்துள்ளன. நாத்திகர்கள் இஸ்லாமியர்களின் சாதனைகளை என்றும் வெளிகூறமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. கிறித்தவதிற்கு என்றுமே ஓத்தூதும் கயவர்கள்தான் நாத்திகர்கள் என்பது தெள்ளத் தெளிவு.

குற்றச்சாட்டு 3:


நமது பதில்:
      கற்பழிப்பிற்கு தண்டனை இல்லை என்பது பொய் என்பதை முன்பே விளக்கியுள்ளோம். எங்கே இஸ்லாம் குறித்து மக்கள் விழிப்படைந்துகொள்வார்களோ என்ற கள்ளத்தனம்தான் மேற்குறிப்பட்ட விமர்சனத்தில் காணப்படுகிறது.

குற்றச்சாட்டு 4:

நமது பதில்:
      முதலில் அந்த ஹதீஸை இவர் முழுமையாக படிக்க வில்லை. இந்த குறிப்பிட்ட ஹதீஸ் முழுமையாக முழுவிவரத்துடன் புஹாரியிலேயே இடம் பெற்றுள்ளது.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
      ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, 'இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?' என்று கேட்டார்கள். அவரை நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) இன்ன விலைக்கு வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள்.
புஹாரி  2141. 

         மரணத்திற்கு பிறகு விடுவிப்பதாக அறிவிப்பு செய்தவருக்கு சிக்கல் ஏற்பட்ட போது அந்த அடிமையை பெற்று நபி(சல்) அவர்கள் விற்றதாகத்தான் உள்ளது. மேலும் மனிதன் இறந்த பிறகு அவன் விட்டுச்செல்லும் எதற்கும் சொந்தம் கொண்டாட முடியாது. அடிமையை விடுவிப்பவர் இறக்கும் முன்பு விடுவிப்பதுதான் சிறந்தது. இதோ பின் வரும் செய்தி அதை தெளிவாக உணர்த்துகிறது..

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
          ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
புஹாரி: 2748

குற்றச்சாட்டு 5:

நமது பதில்:
        இந்த செய்தியில் இடம்பெறும் வாசகம் என்ன கூறுகிறது. இறுதி வாசகம் மர்வான் தனது அடிமைப்பெண்ணின் கால்களை கண்டதற்காக தனது மகனை அந்த பெண்ணை நெருங்கக்கூடாது என்று தனது மகனுக்கு அறிவுறுத்தியதாக கூறி மர்வான் அவர்களின் குணத்தை சுட்டுகிறார். இத்தகைய ஒழுக்க விழுமியங்களைதான் இஸ்லாம் மக்களுக்கு போதித்தது. கச முசா செய்ய சொன்னதை அடிக்கொடிட்டு கச முசாக்களை தேடுபவருக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இந்த ஆசிரியரின் எண்ண ஓட்டம் எதுவோ அதுதான் அவரது கேள்விகளில் தெரிகிறது. (மேலும் அடிமைப்பெண்கள் தொடர்பான தெளிவிற்கு முன் சென்ற எதிர்தொடர் 11 காண்க. refer: source )

குற்றச்சாட்டு 6:

நமது பதில்:  
      முதலில் அல்மூத்ஆ திருமணம் குறித்து  இந்த ஆசிரியரின் போதிய தெளிவு இன்மையைதான் காட்டுகிறது. மூத்ஆ திருமணம் அல்லது தற்காலிக திருமணம் நபி(சல்) அவர்களது காலத்திற்கு முன்பே நடைமுறையில் இருந்த ஒன்று. இதை நபி(சல்) அவர்கள் முதலில் இக்கட்டான சுழலில் மட்டும் அனுமதித்து ஏனைய காலங்களில் தடை செய்கிறார்கள். இதுவே மாபெரும் சமுக மாற்றம் இல்லையா? என்றும் செய்யலாம் என்பதற்கும் இக்கட்டான சூழலில் மட்டும் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதை பின் வரும் அறிவிப்பு கூறுகிறது. 

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
       (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஒரு நாள்) மக்காவில் (சொற்பொழிவாற்ற) எழுந்து நின்று, "அல்லாஹ், மக்களில் சிலருடைய கண்களைக் குருடாக்கியதைப் போன்று அவர்களின் உள்ளங்களையும் குருடாக்கிவிட்டான்;அவர்கள் "அல்முத்ஆ" திருமணம் (தற்போதும்) செல்லும் எனத் தீர்ப்பளிக்கின்றனர்" என்று கூறி, ஒரு மனிதரைச் சாடையாக விமர்சித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை அந்த மனிதர் அழைத்து, "நீர் ஒரு விவரமற்ற முரடர்; என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது) காலத்தில் "அல்முத்ஆ" திருமணம் நடைமுறையில் இருந்தது" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "(அது அப்போதே மாற்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்து) உம்மை நீர் பக்குவப்படுத்திக்கொள்வீராக! (இந்த விவரம் தெரிந்த பின்பும்) அவ்வாறு நீர்("அல்முத்ஆ" திருமணம்) செய்தால், (அது விபசாரக் குற்றம் என்பதால்) உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
               என்னிடம் காலித் பின் அல்முஹாஜிர் பின் சைஃபில்லாஹ் (ரஹ்) அவர்கள், "நான் ஒரு மனிதருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒருவர் வந்து "அல் முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் குறித்துத் தீர்ப்புக் கேட்டார். அப்போது அந்த மனிதர் அதற்கு அனுமதியளித்தார். அப்போது (தீர்ப்பளித்த) அந்த மனிதரிடம் இப்னு அபீஅம்ரா அல்அன்சாரி (ரலி) அவர்கள், "நிதானி(த்துத் தீர்ப்பளி)ப்பீராக!" என்றார்கள். அதற்கு அவர், "அவ்வாறில்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (நபி (ஸல்) அவர்களது) காலத்தில் அது ("அல்முத்ஆ" திருமணம்) நடைபெற்றது" என்று கூறினார்.
          அதற்கு இப்னு அபீஅம்ரா (ரலி) அவர்கள், "அல்முத்ஆ (தவணை முறைத்) திருமணம், இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவருக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவை அனுமதிக்கப்பட்டதைப் போன்று அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு அல்லாஹ் இந்த மார்க்கத்தை உறுதியாக்கியதும் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டான்" என்று கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறினார்கள் என அவர்களுடைய புதல்வர் ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:
             நான் பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்திருந்தேன். பின்னர், "அல்முத்ஆ" திருமணம் செய்யலாகாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள்.
தொடர்ந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
              ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது நான் அங்கு அமர்ந்திருந்தேன்.
முஸ்லிம் 2736.
        அல்மூத்ஆ குறித்து பெண்கள் கேட்டுஇருந்தால் என்னவாகிருக்கும் என்று கூறுகிறார். பெண்கள் கேட்காததற்கு ஒரு காரணம் உண்டு. அல்மூத்ஆ இதற்கு முன்பு என்றுமே நடைமுறையில் இருந்ததை, நபி(சல்) அவர்கள் இக்கட்டான சுழலில் மட்டும் என்று மாற்றும் போது அன்றைய பெண்களின் எண்ண ஓட்டம் எப்படி இருந்து இருக்கும் என்பதை வாசிப்பவரின் எண்ணத்திற்கு விடுகிறேன். பெண்கள் குறித்த கேவலமான எண்ண ஓட்டத்தைதான் இந்த கட்டுரையாளரின் கற்பனை நமக்கு காட்டுகிறது.
         அதாவது மக்கா வெற்றிக்கு பிறகும் படையெடுப்புகள் இருக்கத்தான் செய்தது. இன்னும் சொல்வதாக இருந்தால் நெடுந்தொலைவிற்கான படையெடுப்புகள் இதற்கு பிறகுதான நடைபெற்றது. மூத்ஆவின் தேவை அப்போதுதான். ஆனால் அப்பொழுது இத்தகைய திருமணம் தடை செய்யப்பட்டு விட்டது. முன் கூட்டியே நபி(சல்) அவர்கள் எப்படி தனது ஆசை நிறைவேறியதாக அறிந்து கொண்டார்கள்? தனது ஆசை இதுதான் என எங்கும் கூறியுள்ளார்களா? ஆக நபி(சல்) அவர்களுக்கு முன்னறிவிப்பு வந்தது என்பதை கட்டுரையாளர் ஏற்று கொள்கிறாரா? அடுத்ததாக சஹாபாக்களுக்காக இந்த வகையான முறையை கைகொண்டதாகவும் தனது ஆசையை அதன்மூலமாக நிறைவேற்றிகொண்டதாகவும் கூறுகிறார். போர் போன்று எந்த ஒரு காரணமும் இல்லாமல் என்றும் அனுபவிக்கும் ஒரு ( மூத்ஆ போன்ற ) சுகத்தை இஸ்லாத்தை ஏற்காமல் என்றும் நபிதோழர்கள் அனுபவித்து இருக்கலாம். ஏன் கல்லால் அடிவாங்கி, நட்டை துறந்து சென்று, பிறகு போரில் ரத்தம் சிந்தி பெறவேண்டும். இவரது எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் இஸ்லாம் எவ்வாறு மக்களிடம் சென்றிருக்கும். இத்தகைய லாஜிக்கான கேள்விகளுக்கு கதை ஆசிரியர் என்ன பதில் வைத்திருக்கிறார் ......
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்..........    




No comments:

Post a Comment