பக்கங்கள் செல்ல

Thursday, April 16, 2015

எதிர் தொடர் 8 : பொருந்தா உறவும் வேதவெளிப்பாடும்- நபி(சல்) ஜைனப்(ரலி) திருமணம் பொருந்தா திருமணமா?



எது பொருந்தா உறவு - ஒரு சிறிய அறிமுகம்:
           
   இந்த கட்டுரை எனக்கு இந்த கட்டுரை ஆசிரியரின் குணங்களை வெளிகொணார ஒரு அரிய வாய்ப்பு. கதைசொல்லிகள்( story fabricators) எப்படி பட்ட வர்கள் என்பதை தோலுரிக்க இந்த கட்டுரை மிகச் சிறந்த வாய்ப்பாக நான் கருதுகிறேன். கதை சொல்லிகள் உன்மையான செய்தி உடன் பல பொய்யான செய்திகளை கலந்து தன்னுடைய கருத்தை நிலை நிறுத்த முற்படுவர். இதை மனதில் வைத்துகொண்டு இந்த கட்டுரையை ஆராய்வோம்.[refer:Source].  நபி(ஸல்) அவர்களின் மதிப்பை குறைக்க ஒரு மிக சிறந்த வாய்ப்பாக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பயன்படுத்திவரும் ஒரு ஆயுதம் தனது வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்தது. இது குறித்து மாண்ட்கொமெரி வாட் அவர்களின் கருத்தை பதிவு செய்துவிட்டு என்னுடைய ஆய்வை தொடர்கிறேன்.         


     The marriage with Zaynab seemed incestuous, but this conception of incest was bound up with old practices belonging to a lower, communalistic level of familial institutions where a child's paternity was not definitely known ; and this lower level was in process of being eliminated by Islam. From the standpoint of Muhammad's time, then, the allegations of treachery and sensuality cannot be maintained. His contemporaries did not find him morally defective in any way. On the contrary, some of the acts criticized by the modern Westerner show that Muhammad's standards were higher than those of his time. In his day and generation he was a social reformer, even a reformer in the sphere of morals. He created a new system of social security and a new family structure, both of which were a vast improvement on what went before. By taking what was best in the morality of the nomad and adapting it for settled communities, he established a religious and social frame work for the life of many races of men. That is not the work of a traitor or an old lecher '.  
                - P.No 233-234 ,Prophet and Statesman by W.Montgomery Watt



   இந்த கருத்தானது அந்த காலத்தின் சமுக அவலம் ஒன்றை நாசுக்காக சுட்டுகிறது. அனாதைகளின் மூல ஊற்றான விபச்சாரத்தை தகர்த்தெரிந்துவிட்டுதான் அனாதைகளை தங்களது மகன்/மகள் என்று கொள்வதை இஸ்லாம் தடைசெய்கிறது என்பதை சுட்டவே இந்த சமுக பழக்கத்தை கீழானது என்று வாட் கூறுகிறார். மேலும் அன்றைய அரபிய சமுகத்தில் தனக்கு பிறந்த குழந்தையை விற்கும் அவல சூழலே காணப்பட்டது. இது குறித்து இந்த கட்டுரையின் முகவுரையில் காண்போம்.

அல் குர்ஆன் 33:5 வசனமும் அதன் விளக்கமும்:           

    அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல் குர்ஆன் 33:5

    தத்தெடுத்தலை தடை செய்ய்யும் இந்த சட்டதின் தேவை என்ன என்பதை நாம் சிந்திக்கும் போது அல் அஹ்சாப் அத்தியாயம் இறங்கிய பிறகு இறங்கிய அத்தியாயம் அந்நிஸா ( 4 அத்தியாயம் ) ஆகும். இந்த அத்தியாயம் திருமணச் சட்டம் மற்றும் சொத்துரிமை குறித்து விளக்ககூடியவை. குடும்ப உறவுகளின் வரைமுறைகளை சரியாக வகுக்கப்படாத நிலையில் சொத்துரிமை மற்றும் குடும்பவியல் சீர்திருத்தங்களை ஏற்படுத்த முடியாது. உதரணமாக பின்வரும் வசனத்தை எடுத்து கொள்வோம்:        

     உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். 
அல் குர்ஆன் 4:23
     
    இந்த வசனத்தில் இடம்பெரும் وَحَلَٰٓئِلُ أَبۡنَآئِكُمُ ٱلَّذِينَ مِنۡ أَصۡلَٰبِكُمۡ என்ற அரபிய சொல்லாடலுக்கு உங்களது முதுகுகளில் இருந்து பிறந்த உங்களது புதல்வர்களின் மனைவியர் என்று பொருள்    
     


மேலும் அரபிய மக்களிடம் காணப்பட்ட வளர்ப்பு குழந்தை முறையானது தங்களுக்கு குழந்தைகள் இருக்கும் போதே ஒருவரை வளர்ப்பு குழந்தை என்று அறிவித்து தன்னுடைய குழந்தையாக ஆக்கிக் கொள்வர். அப்படி ஆக்கப்பட்ட குழந்தைகள் ரத்த குழந்தைகளின் முழு உரிமையையும் கடமையையும் பெற்று கொண்டனர்.  தங்களது உன்மை பெற்றொரின் அடையாளத்தை மாற்றி கொள்வர். இது ரத்த உறவுகளை தகர்ப்பதாய் அமைந்தது. இது ஆண் குழந்தைகளை பெரும் சொத்தாக கருதப்பட்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தத்தெடுத்தல் முறைக்கு துணையாக இருந்த இரண்டு சமுக அவலங்களை இஸ்லாம் துரத்தியடித்தது   



1. எதிரி கோத்திரத்தாரின் குழந்தைகள் கடத்தப்பட்டு சந்தைகளில் விற்கப்பட்டனர். ஜைத்(ரலி) அவர்களும் இவ்வாறு உக்காழ் சந்தையில் விற்க்கப்பட்டவர்தான்.இது இனக்குழுக்களை ஒன்றினைத்தலின் மூலம் ஒழிக்கப்பட்டது. 

2.குழந்தைகளை கொலை செய்வது .இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் இவ்வாறு கொல்லப்பட்டதில் ஆண் குழந்தைகளும் அடக்கம் என்று திருக்குர்ஆனும் வரலாற்று நூல்களும் கைகாட்டுகின்றன. இந்த கொலைகள் வறுமைக்கு பயந்தும் அபசகுணமாக கருதியும் நடை பெற்றன.

    இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன. அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.  
அல் குர்ஆன் 6:137   

   "வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான் .
அல் குர்ஆன் 6:151 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது" என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், "நிச்சயமாக அது மிகப் பெரிய பாவம்தான்" என்று சொல்லிவிட்டு, "பிறகு எது?" என்று கேட்டேன். "உன் மகன் உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணுவான் என அஞ்சி அவனை நீ கொல்வது" என்று சொன்னார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்க, அவர்கள், "உன்(மீது அபார நம்பிக்கைவைத்துள்ள) அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது" என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 141

   சிலர் தங்களது குழந்தைகள் பிறக்கும் போது நீல நிறமாகவோ, புள்ளிகள் உடையனவாகவோ, அதிக முடி உடையனவாகவோ அல்லது ஊனமுற்றோ இருந்தால் தீய சகுணமாக கருதி உயிருடன் புதைத்தனர்
நூல்: புலூஹ் அல் அரப் (3/43) 




    இவ்வாறு குழந்தைகளை கொலை செய்வதை தடுக்க சில நல்ல உள்ளம் கொண்ட அரபிய வள்ளல்களால் தத்தெடுத்தல் ஊக்கப்படுத்தப் பட்டது. எடுத்து காட்டாக ஜைது பின் அமர்(ரலி), அவர்கள் இத்தகைய குழந்தைகளை செல்வத்தை ஈடாக கொடுத்து பெற்று கொண்டார்

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

      ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, 'குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தின் படி நடக்கவில்லை" என்று சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்தேன். மேலும், அவர் உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், 'அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்" என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளுடைய தந்தையிடம் (சென்று), 'நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளுடைய செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்து)க் கொள்கிறேன்" என்று சொல்வார்.

நூல் : புஹாரி 3828
      

       இஸ்லாம் இது போன்ற குழந்தைகளை அனாதையாக்கும் சமுக அவலங்களை தடை செய்துவிட்டுதான் தத்தெடுத்தலை தடை செய்கிறது .


அல் குர்ஆன் 33:37, 38, 39 வசனமும் அதன் விளக்கமும்:



      யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.



      அல்லாஹ் அவருக்காகச் செய்த ஏற்பாட்டில் நபியின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன். 



1.   இந்த வசனம் வளர்ப்பு மகன் ஜைது(ரலி) அவர்களால் விவாகரத்து செய்யப்பட்ட ஜைனப்(ரலி) அவர்களை நபி(சல்) அவர்கள் திருமணம் செய்ய அனுமதி வழங்குகிறது.



2. அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய மனதில் மறைத்ததாக இந்த வசனம் கூறுகிறது. மாறாக நபி(ஸல்) அவர்கள் எந்த தீய எண்ணத்தையும் மனதில் மறைத்ததாக இந்த வசனம் கூறவில்லை.இதை அடுத்த வசனம் தெளிவு படுத்துகிறது.



3.   நபி(ஸல்) அவர்கள் மற்றும் ஜைனப்(ரலி) அவர்களது திருமணம் தத்து பிள்ளைகள் சொந்த பிள்ளைகள் அல்ல என்ற குர்ஆன் வசனம் இறங்கிய பிறகு நடைப்பெற்றதே



     ஆக நபியவர்கள் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற இப்படி தத்து எடுப்பதை தடுத்ததாக ஆசிரியரின் கற்பனையை என்னவென்பது. ஆக நபி(ஸல்) அவர்கள் தீய எண்ணத்தில் வசனங்களை கூறினார் என்பது அப்பட்டமான பொய்யாகும். ஆனால் நபி(சல்) அவர்கள் எதை மனதில் மறைதார்கள் என்பதை கூற பல இட்டுகட்டப்பட்ட செய்திகள் இஸ்லாமிய நூல்களில் காணப்படுகிறது. அதை தான் இவரும் தனது கருத்துக்கு ஆதாரமாக எடுத்து வைக்கிறார். அவற்றை பார்த்து விட்டு இவர் எப்படியான கதைசொல்லி என்பதை நிறுவ உள்ளேன்.

     நாம் இப்பொழுது ஆய்விற்குள் நுழைவோம். இந்த கட்டுரை ஆசிரியர் நபி(ஸல்) அவர்கள் ஜைனப்(ரலி) மீது கொண்ட மோகத்தால்தான் இந்த செயலை செய்ததாக கூறுகிறார். ஆனால் இதற்காக அவர் கூறும் ஆதாரம் ஒவ்வொன்றும் அவரது நிலைபாடு தவறானது அல்லது காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்டது என்பதை உணர்த்த போதுமானது. அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவோம்.



ஆதாரம் 1:








நமது மறுப்பு:
     இவர் மேலே குறிப்பிடும் தஃப்சிர் தபரியில் இடம்பெறும் செய்தியானது கீழ் காணும் அறிவிப்பாளர் தொடரை கொண்டது.

Ibn Zayd --> Ibn Wahab --> Yunis

             இதில் இடம் பெறும் இப்னு ஜைத் என்பவர் அப்துர் ரஹ்மான் இப்னு ஜைத் இப்னு அஸ்லம் என்பவர் ஆவார். இவர் தபாஃ தாபியி ஆவார். இவரது காலம் 180 ஹிஜ்ரி. இவர் நபி(சல்) அவர்கள் குறித்த கருத்தை  தாபியீ போன்ற எந்த அறிவிப்பாளரும் இன்றி கூறுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று ஆகும். மேலும் இவர் பலவீனமானவர் என்று இப்னு ஜவ்ஸி, இப்னு ஹஜர் போன்றவர்களால் முத்திரை குத்தப்பட்டவர். ஆக இந்த அறிவிப்பு பலவீனமானது. இட்டுகட்டப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

      சரி இந்த செய்தியே பலவீனமானது என்றால் இதில் அதிக்கப்படுத்தி சில வற்றை சேர்த்து கூறுபவரை என்ன வென்பது. வாசிப்பவரின் முடிவிற்கே விடுகிறேன். ஆம் இவர் கூறும் தபரியின் அறிவிப்பில் இல்லாத கருத்துகளையும் இந்த கட்டுரை ஆசிரியர் சேர்த்து கூறுகிறார்,


     ஆம் இது தபரியின் தஃப்சீரில் இல்லாத தன்னுடைய சொந்த புனைவு. என்ன செய்வது இவர் காப்பி அடித்த ROBERT SPENCERன் புத்தகத்தில் அப்படிதான் உள்ளது. ஆக இது காழ்ப்புணர்ச்சியால் மற்றுமே தோன்றிய ஆய்வு.


     மேற்குறிய பகுதிலும் பாதிக்கு மேல் புனைவுதான். “அதன் பிறகு அவரை அடையும்.....” என்று தொடங்கும் வரிகளில் இருந்து புனைவு தான். இதுவே போதும் இந்த கட்டுரை ஆசிரியர் மிகப்பெரிய பொய்யர் என்பதற்கு.   இந்த வாசகத்தை இணைக்க வேண்டிய தேவை என்ன? 

ஆதாரம் 2:

நமது மறுப்பு:

ஏன் அந்த வசனத்தின் முழு விளக்கத்தையும் குர்துபி அவர்களின் விளக்கவுரையில் இருந்து கூற முடியவில்லை. இதோ மீதி பாதி

அலி இப்னு ஹுஸைன் அவர்கள் கூறியதாவது
      அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் ஜைத்(ரலி) அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களை விவாகரத்து செய்வார்கள் என்றும் அல்லாஹ் ஜைனப்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்விப்பான் என்பது அல்லாஹ்விடம் இருந்து அறிவிக்கப்பட்டது. அப்போது ஜைத்(ரலி) அவர்கள் ஜைனப்(ரலி) அவர்கள் குறித்து குற்றம்சுமத்தி, அவரது குணத்தை குறைகூறி தனக்கு கீழ்படிவதில்லை என்று கூறி ஜைனப்(ரலி) அவர்களை விவாகரத்து செய்யப்போவதாகவும் நபி(சல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(சல்) அவர்கள்அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள். உன்மனைவியை உன்னிடமே வைத்துகொள்என்று ஜைத்(ரலி( அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் ஜைத்(ரலி) அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களை விவாகரத்து செய்வார்கள் என்றும் நபி(ஸ்ல) அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களை திருமணாம் செய்வார்கள் என்பதையும் நபி(சல்) அவர்கள் அறிந்தே இருந்தார்கள். இதைத்தான் நபி(சல்) அவர்கள் மறைத்தார்கள். அவர்கள் ஜைத்(ரலி) அவர்களிடம் ஜைனப்(ரலி) அவர்களை விவாகரத்து செய்ய சொல்லவில்லை. ஏன் என்றால் ஜைத்(ரலி) அவர்களுக்கு பிறகு ஜைனப்(ரலி) அவர்களை நபி(சல்) அவர்கள் திருமணம் செய்யும் பட்சத்தில் மக்கள்   தனது அடிமையை விவாகரத்து செய்ய வற்புறுத்தி நபி(சல்) அவர்கள் அவரது மனைவியை திருமணம் செய்துகொண்டார்என்று கூறுவார்கள் என்று அஞ்சினார்கள். ஆகவே அல்லாஹ், நபி(சல்) அவர்கள் மக்கள் கூறுவதற்கு அஞ்சியதையும், விவாகரத்து நடைபெறும் என்பதை அறிந்தும் ஜைத்(ரலி) அவர்களை மனைவியை தன்னுடனே வைத்துக்கொள்ளுமாறு நபி(சல்) அவர்கள் கூறியதை கண்டித்தும். “மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன்.” என்று இவ்வசனத்தில் கூறினான்.

        நம்முடைய அறிஞர்கள் கூறினார்கள்: இது தான் இந்த வசனத்திற்கான சரியான விளக்கம் ஆகும். மேலும் அறிஞர்களான அல் ஜுஹ்ரி, அல் காதி பக்ர் இப்ன் அல் அஃலா அல் குஷைரி, அல் காதி அபு பக்ர் இப்ன் அல் அரபி அவர்களது விளக்கமும் இதுதான்.

(தஃப்ஸீர் அல் குர்துபி 14/190, 191)


    குர்துபி அவர்கள் தனது நிலையை கூறிய பிறகும் ஏன் இந்த தவறான கருத்தை ஆசிரியர் விதைக்க முற்படுகிறார். இன்னும் ஏனைய ஆதாரங்களுடன் மேற்கூறிய விளக்கம் எப்படி பொருந்துகிறது என்பதை காண்போம். இதே கட்டுரையில்  இவர் குறிப்பிடும் ஹதிஸை பதிவு செய்கிறேன்.


அனஸ்(ரலி) அறிவித்தார்.

      ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மண விலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச் செய்' என்று கூறலானார்கள். நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37 வது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள். இதன் காரணத்தால் ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக் கொள்வார்கள். 'உங்களை (நபி(ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத்தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
'(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டீர்கள்' எனும் (திருக்குர்ஆன் 33:37 வது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப்(ரலி) அவர்களுக்கும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி(ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது) தான் அருளப்பெற்றது' என்று அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.
நூல்: புஹாரி 7420.

 
    மேலே உள்ள அறிவிப்பை சற்று கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். 33:37 வசனத்தை அடிப்படையாக கொண்டு ஜைனப்(ரலி) பெருமை பேசிக்கொள்வார்களாம். “என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழுவானங்களுக்கு மேலிருந்து (நபி(ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக் கொடுத்தான்' என்று சொல்வார்களாம். இதன் அடிப்படையில் அந்த வசனத்தின் விளக்கம் என்னவாக இருக்கும். அல்லாஹ் வெளிப்படுத்த இருந்தது ஜைனப்(ரலி) அவர்களை நபி(சல்) அவர்களுக்கு மண்முடிக்க நாடியதைதான் குறிக்கும். அல்லாஹ்வின் அந்த நாட்டத்தை நபி(சல்) அவர்கள் மறைத்தார்கள் என்பதுதான் சரியான விளக்கமாக இருக்கும். நபி(சல்) அவர்கள் ஏனைய மனைவியர்  போல் திருமணம் செய்தார்கள் என்றால் மற்ற மனைவியரிடம் அல்லாஹ் என திருமணத்தை ஏழு வானங்களுக்கு (இறைவசனங்களினால்) மேல் இருந்து  செய்வித்தான் என்று எப்படி பெருமை பேச முடியும். நபி(சல்) அவர்கள் தன்னுடைய தீய எண்ணத்தை நிறைவேற்றி கொள்ள எண்ணினார்கள் என்றால் ஏன் இப்படி ஒரு வசனத்தை கூற வேண்டும். தன் தீய எண்ணதை தானே மறைத்தேன் என்று நபி(சல்) அவர்கள் மக்களிடம் பரப்ப என்ன தேவை வந்தது.  தன்னுடைய சுயலாபத்திற்காக பாடுபடும் எவரும் தன்னுடைய தவறான எண்ணங்களை வெளிப்படுத்துவாரா?......இத்தகைய logic ஆன கேள்விகளுக்கு இந்த கட்டுரை ஆசிரியர் என்ன விளக்கம் கொடுப்பார்?  

No comments:

Post a Comment